Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மக்களின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கும் டயர் இறக்குமதி முறைகேடுகள் – எஸ்பிஆர்எம் தீவிர விசாரணை
தற்போதைய செய்திகள்

மக்களின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கும் டயர் இறக்குமதி முறைகேடுகள் – எஸ்பிஆர்எம் தீவிர விசாரணை

Share:

புத்ராஜெயா, செப்டம்பர்.29-

நாட்டில் டயர் இறக்குமதியில் பல முறைகேடுகள் நடந்து வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து எஸ்பிஆர்எம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

விலை நிர்ணயம், பாதுகாப்பற்ற இறக்குமதி மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக இவ்விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

ஆண்டுதோறும் சுமார் 300 கண்டெய்னர்களில், மலேசிய சாலைகளுக்குப் பொருந்தாத வகையிலான, கனரக வாகன டயர்கள், இறக்குமதி செய்யப்படுவதாக எஸ்பிஆர்எம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் மக்களுக்கு ஆபத்து ஏற்படுவதோடு, அரசாங்கத்தின் வருவாயிலும் ஆண்டுதோறும் சுமார் 70 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்படுவதாகவும் எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.

அஃப்தா என்றழைக்கப்படும் ஆசியான் தடையற்ற வர்த்தகப் பகுதியைச் சேர்ந்த நாடுகளுக்கான, 40 சதவிகித வரியும், 10 சதவிகித விற்பனை வரியும் செலுத்தாமல், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சம் கனரக வாகனங்களின் டயர்கள் மலேசியாவில் இறக்குமதி செய்யப்படுவதாகவும் எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்