தியோமான் தீவு, பூலாவ் ரெங்கிஸ் அருகே “டிஸ்கவர் ஸ்குபா டைவிங்” நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 65 வயதான சபியா ஷியெக் என்பவர் படகில் ஏறும் போது தவறி கடலில் விழுந்து உயிரிழந்தார்.
இன்று காலை 9.50 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்த நிலையில், கடலுக்குள் விழுந்த அவரை முக்குளிப்புப் பயிற்றுநர் மீட்டெடுத்தார்.
எனினும் மயக்க நிலையில் மீட்கப்பட்ட அவர், பூலாவ் தியோமானில் உள்ள தெகெக் சுகாதார நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
குடும்பத்தினருடன் நான்கு நாள் விடுமுறைக்காக நேற்று தியோமான் வந்திருந்த சபியாவுக்கு முக்குளிப்பு உரிமம் இல்லை என்றும், சுமார் 7 மீட்டர் ஆழமுள்ள பகுதியில் இந்தச் சம்பவம் நடந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அவரது உடலானது குவாந்தானில் உள்ள தெங்கு அம்புவான் அஃப்ஸான் மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.








