கடந்த ஜூலை மாதம் ஜகார்த்தாவில் மலேசியா ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் , தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு விமானியின் வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துகளை போலீசார் முடக்கியுள்ளனர்.
இது குறித்து புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஹுசேன் ஓமார் கான் கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ள அந்த விமானி, மலேசியா ஏர்லைன்ஸ் விமானிக்கும், போதைப்பொருள் கும்பலுக்கும் இடையே இடைத்தரகராக செயல்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் அபாயகரமான போதைப் பொருள் சட்டம் 1985 -ன் கீழ் அந்த விமானி 60 நாட்கள் தடுத்து வைக்கப்படுவார் என்றும் ஹுசேன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த விமானியின் வங்கிக் கணக்குகள் மற்றும் பிற நிதிப் பதிவுகளைப் போலீசார் ஆய்வு செய்து வருவதாகவும், கணக்குகளில் உள்ள பணத்தின் அளவு குறித்து இதுவரை தகவல் வெளியிடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








