எல்மினா விமான விபத்தில், விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு அந்த கடைசி விநாடிகளின் நிகழ்ந்த உரையாடல் பதிவை கண்டறிவதற்கு உதவும் விமான கொக்பிட் குரல் பதிவு சாதனம் அழிந்து விட்டதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
இதன் தொடர்பில், சிவிஆர் என்று சுருங்க அழைக்கப்படும் அந்த குரல் பதிவு சாதனைத்தில் இடம் பெற்றுள்ள உரையாடலை கண்டறிவதற்கும், அதன் உள்ளடக்கத்தை பகுப்பாய்வு செய்தவற்கும், அந்த சாதனம் சிங்கப்பூரின் போக்குவரத்து பாதுகாப்பு புலன் விசாரணை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
இந்த ஆய்விற்காக விமான விபத்து புலன் விசாரணைப்பிரிவின் தலைவர் ப்ரிகாடியர் ஜெனரல் தான் சி கீ யும் சிங்கப்பூரில் இருப்பதாக அந்தோணி லோக் தெரிவித்தார். விமானம் விழுந்தவுடன் தீப்பற்றிக்கொண்டதால் அந்த சிவிஆர் சாதனத்தின் பழைய பதிவுகள் அனைத்தும் முழுமையாக சேதமுற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் தொடர்பில் சிங்கப்பூர் உதவி நாடப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் மேலும் விவரித்தார்.

Related News

இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பில் கார் மோதிய சம்பவம்: 21 வயது இளைஞர் கைது

முன்னாள் இராணுவத் தளபதிக்கு எதிராக மேலும் இரண்டு புதிய பண மோசடிக் குற்றச்சாட்டுகள்: தான் குற்றமற்றவர் என வாதிட்டு விசாரணை கோரினார்

ஶ்ரீ அமான் தம்பதி கொலை வழக்கு: வெளிநபர்களின் மரபணுக்கள் கண்டறியப்படவில்லை

ஸ்பெயினிலிருந்து கடத்தி வரப்பட்ட 50 டன் பன்றி இறைச்சி பறிமுதல்

4.7 மில்லியன் ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டு: முன்னாள் ஆயுதப்படை தளபதி குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்


