Feb 28, 2026
Thisaigal NewsYouTube
குண்டாங் ஏரி விபத்தில் 3 உயிர்களைக் காத்த 7 இளைஞர்களுடன் பிரதமர் நேரில் சந்திப்பு: வீர செயல்களைப் பாராட்டி வெகுமதிகளை வழங்கினார்
தற்போதைய செய்திகள்

குண்டாங் ஏரி விபத்தில் 3 உயிர்களைக் காத்த 7 இளைஞர்களுடன் பிரதமர் நேரில் சந்திப்பு: வீர செயல்களைப் பாராட்டி வெகுமதிகளை வழங்கினார்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.28-

ரவாங், குண்டாங் தாசெக் பீரு ஏரியில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவத்தில், துணிச்சலாக ஏரிக்குள் குதித்து, அக்காரில் சிக்கியிருந்த தாயையும், அவரது இரண்டு குழந்தைகளையும் மீட்ட ஏழு இளைஞர்களின் செயல்களை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று நேரில் சந்தித்துப் பாராட்டினார்.

புத்ராஜெயா, ஸ்ரீ பெர்டானா வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அன்வார், அங்கு வருகை புரிந்திருந்த, அந்த 7 இளைஞர்களுக்கும் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி நடந்த இவ்விபத்து குறித்தும், மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் அன்வார் அவர்களிடம் விசாரித்தார்.

மேலும், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், பிறர் உயிரைக் காக்க அவர்கள் மேற்கொண்ட தியாகம் மூன்று உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாகவும் அன்வார் புகழாரம் சூட்டினார்.

அதே வேளையில், அந்த இளைஞர்களின் வீரச் செயலைப் பாராட்டி அவர்களுக்கு வெகுமதிகளையும் வழங்கினார்.

இவ்விபத்தின் போது, அந்த இளைஞர்கள் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு 'மனிதச் சங்கிலி' போலச் செயல்பட்டு, காருக்குள் சிக்கியிருந்தவர்களைப் பத்திரமாக மீட்ட காணொளியானது சமூக ஊடகங்களில் பரவி பலரையும் மெய்சிலிர்க்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

Related News

2028-ஆம் ஆண்டிற்குள் கிளானா ஜெயா என எல்ஆர்டி ரயில் சேவையில் 26 புதிய ரயில்கள்: போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவிப்பு

2028-ஆம் ஆண்டிற்குள் கிளானா ஜெயா என எல்ஆர்டி ரயில் சேவையில் 26 புதிய ரயில்கள்: போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவிப்பு

புக்கிட் பெருந்தோங்கில் பெண்ணிடம் நகை கொள்ளை முயற்சி: இருவருக்கு போலீஸ் வலைவீச்சு

புக்கிட் பெருந்தோங்கில் பெண்ணிடம் நகை கொள்ளை முயற்சி: இருவருக்கு போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் அரண்மனை சார்பில் 2000 பொதிகள் நோன்புக் கஞ்சி விநியோகம்

ஜோகூர் அரண்மனை சார்பில் 2000 பொதிகள் நோன்புக் கஞ்சி விநியோகம்

பெட்டாலிங் ஜெயாவில் போக்குவரத்திற்கு எதிர்த் திசையில் காரைச் செலுத்தி பரபரப்பை ஏற்படுத்திய நபர் கைது

பெட்டாலிங் ஜெயாவில் போக்குவரத்திற்கு எதிர்த் திசையில் காரைச் செலுத்தி பரபரப்பை ஏற்படுத்திய நபர் கைது

நீலாய் வெடிப்புச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 63 வயது முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

நீலாய் வெடிப்புச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 63 வயது முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

ரவூப் தீ விபத்து: 5 குடும்ப உறுப்பினர்களை இழந்த அக்கா, தம்பிக்கு ஸாஹிட் ஆறுதல்

ரவூப் தீ விபத்து: 5 குடும்ப உறுப்பினர்களை இழந்த அக்கா, தம்பிக்கு ஸாஹிட் ஆறுதல்