நேற்று வெள்ளிக்கிழமை ரவாங், ஜாலான் பத்து ஆராங் சாலையில் கார் ஒன்றினால் மோதப்பட்ட ஓர் இந்தியப் பிரஜை உயிரிழந்தார். இரவு 9.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் 42 வயது இந்தியப் பிரஜை சம்பவ இடத்திலேயே மாண்டதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி ஸைனால் முகமட் தெரிவித்தார்.
போலீசார் மேற்கொண்ட பூர்வாங்க விசாரணையில் கார் ஒன்று வழித்தடத்திலிருந்து விலகி, மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்த வழித்தடத்தில் நுழைந்து அந்த மோட்டார் சைக்கிளோட்டியை மோதியதாக எசிபி ஸைனால் குறிப்பிட்டார். இந்த விபத்தில் மொத்தம் நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்டிருந்ததாக எசிபி ஸைனால் விவரித்தார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


