நேற்று வெள்ளிக்கிழமை ரவாங், ஜாலான் பத்து ஆராங் சாலையில் கார் ஒன்றினால் மோதப்பட்ட ஓர் இந்தியப் பிரஜை உயிரிழந்தார். இரவு 9.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் 42 வயது இந்தியப் பிரஜை சம்பவ இடத்திலேயே மாண்டதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி ஸைனால் முகமட் தெரிவித்தார்.
போலீசார் மேற்கொண்ட பூர்வாங்க விசாரணையில் கார் ஒன்று வழித்தடத்திலிருந்து விலகி, மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்த வழித்தடத்தில் நுழைந்து அந்த மோட்டார் சைக்கிளோட்டியை மோதியதாக எசிபி ஸைனால் குறிப்பிட்டார். இந்த விபத்தில் மொத்தம் நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்டிருந்ததாக எசிபி ஸைனால் விவரித்தார்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


