Dec 3, 2025
Thisaigal NewsYouTube
முஹிடின் யாசீனின் பிரதித்துவ மனுவைச் சட்டத்துறை அலுவலகம் நிராகரித்தது
தற்போதைய செய்திகள்

முஹிடின் யாசீனின் பிரதித்துவ மனுவைச் சட்டத்துறை அலுவலகம் நிராகரித்தது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.07-

அதிகாரத் துஷ்பிரயோகம், லஞ்ச ஊழல், சட்டவிரோதப் பணம் மாற்றம் தொடர்பிலான 7 குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி, முன்னாள் பிரதமரும், பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான டான் ஶ்ரீ முஹிடின் யாசின் செய்து கொண்ட பிரதிநிதித்துவ மனுவைச் சட்டத்துறை அலுவலகம் நிராகரித்துள்ளது.

நாட்டின் எட்டாவது பிரதமராகத் தாம் பொறுப்பெற்று இருந்த போது நாட்டின் நிதி வளத்தில் முறைகேடு புரிந்ததாக முஹிடினுக்கு எதிரான 7 குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு தொடர்ந்து நடைபெறுவதற்கு சட்டத்துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ளதாக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் வான் ஷாஹாருடின் வான் லாடின், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி முஹிடின் யாசினிடமிருந்து பெறப்பட்ட அந்த பிரதிநிதித்துவ மனுவை, கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி சட்டத்துறை அலுவலகம் நிராகரித்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் தொடர்பில் முஹிடினுக்கு எதிரான 7 குற்றச்சாட்டுகள் மீதாக வழக்கு விசாரணையைத் தொடங்குவதற்கு பிராசிகியூஷன் தரப்பு தயாராக இருப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதி கே. முனியாண்டியிடம் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் வான் ஷாஹாருடின் தெரிவித்தார்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி