May 26, 2026
Thisaigal NewsYouTube
சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை
தற்போதைய செய்திகள்

சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை

Share:

கோலாலம்பூர், டிச. 17-


உணவகங்களிலும், இதர உணவு விற்பனை மையங்களிலும் புகைப்பிடிக்கக்கூடாது என்று அரசாங்கம் வலியுறுத்தி வரும் வேளையில் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான், தனது நண்பர்களுடன் ஓர் உணவகத்தில் உற்சாகம் பொங்க சிகரெட் கையுமாக புகைப்பிடித்து கொண்டிருக்கும் காட்சியைக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உணவகங்களில் புகைப்பிடிப்பதற்கு சுகாதார அமைச்சு தடை விதித்துள்ள வேளையில் சக அமைச்சர் ஒருவர், உணவகத்தில் புகைப்பிடிக்கும் காட்சியைக்கொண்ட அந்த புகைப்படம் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சுல்கிப்லி அகமட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த புகைப்படத்தை சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சுல்கிப்லி மறு பதிவிட்டுள்ளார். சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை என்ற வாசகத்துடன் பட விளக்கம் தந்துள்ளார்.

ஆனால், வெளியுறவு அமைச்சர் முகமட் ஹசான் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அவர் விளக்கவில்லை.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு