பிரதான நெடுங்சாலைகளில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சீனப்புத்தாண்டையொட்டிய நீண்ட விடுமுறையை முடித்துக் கொண்டு, பலர் தலைநகரை நோக்கி வீடு திரும்பத் தொடங்கியதைத் தொடர்ந்து காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வடக்கு தெற்கு Plus நெடுங்சாலை மற்றும் கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்தன என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியமான LLM அறிவித்துள்ளது.
இந்த போக்குவரத்து நெரிசல் நள்ளிரவு வரை நீடித்ததாக ஓர் அறிக்கையில் LLM தெரிவித்துள்ளது.







