Mar 19, 2026
Thisaigal NewsYouTube
தெலுக் இந்தானில் பேரிழப்பு: 6 வீடுகள் எரிந்து நாசம்; ரிம18,000 பணம், நகைகள் எரிந்ததால் மக்கள் கண்ணீர்!
தற்போதைய செய்திகள்

தெலுக் இந்தானில் பேரிழப்பு: 6 வீடுகள் எரிந்து நாசம்; ரிம18,000 பணம், நகைகள் எரிந்ததால் மக்கள் கண்ணீர்!

Share:

தெலுக் இந்தான், அக்டோபர்.26-

தெலுக் இந்தான், கம்போங் திரெங்கானுவில் உள்ள ஜாலான் மாக் இந்தான் பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆறு வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. ஆறு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 29 பேர் தங்களின் உடமைகளை இழந்து தவித்தனர். சம்பவத்தின் போது உறவினர்களைப் பார்க்கச் சென்றிருந்ததால் தப்பியோடிய லோகேஸ்வரி என்ற பாதிக்கப்பட்டவர், தனது 18 ஆயிரம் ரிங்கிட் பணம், நகைகள் உள்ளிட்ட முக்கியப் பொருட்களை இழந்து கண்ணீர் மல்கினார்.

வீட்டில் தனியாக இருந்த ஜெயாவும் அவரது 18 வயது மகள் டி. ரீத்தாவும் வெளியிலிருந்து வந்த சத்தம் கேட்டுச் சுதாரித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உயிர் தப்பியுள்ளனர். சம்பவம் நடந்தபோது தனது ஏழு குடும்ப உறுப்பினர்களுடன் உறங்கத் தயாராகிக் கொண்டிருந்ததாகவும், அப்போது நடு வீட்டில் இருந்து தீ வெளிச்சத்தைக் கண்டதாகவும் கூறினார் 44 வயது கலைவாணி.

அருகிலிருந்த வீடுகளில் தீ பரவாமல் இருக்க, அண்டை வீட்டார் தீயணைப்புத் துறையினர் வரும் வரை தண்ணீரைப் பீய்ச்சி அடித்து உதவினர். இந்த விபத்து தொடர்பாக கோத்தா திங்கி நகராட்சி மண்டபத்தில் உள்ள தற்காலிக நிவாரண மையத்தில் 29 பேரும் தற்போது தங்கியுள்ளனர். விபத்துக்கான காரணமும் சேத மதிப்பீடு குறித்தும் தீயணைப்புத் துறையினர் விசாரித்து வருவதாக பேரா மாநிலத் தீயணைப்பு - மீட்புப் படையின் செயல்பாடுகளுக்கான இடைக்காலப் பொறுப்பதிகாரி ஷாஸ்லீன் முகமட் ஹனாஃபியா தெரிவித்தார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை