Oct 26, 2025
Thisaigal NewsYouTube
தெலுக் இந்தானில் பேரிழப்பு: 6 வீடுகள் எரிந்து நாசம்; ரிம18,000 பணம், நகைகள் எரிந்ததால் மக்கள் கண்ணீர்!
தற்போதைய செய்திகள்

தெலுக் இந்தானில் பேரிழப்பு: 6 வீடுகள் எரிந்து நாசம்; ரிம18,000 பணம், நகைகள் எரிந்ததால் மக்கள் கண்ணீர்!

Share:

தெலுக் இந்தான், அக்டோபர்.26-

தெலுக் இந்தான், கம்போங் திரெங்கானுவில் உள்ள ஜாலான் மாக் இந்தான் பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆறு வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. ஆறு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 29 பேர் தங்களின் உடமைகளை இழந்து தவித்தனர். சம்பவத்தின் போது உறவினர்களைப் பார்க்கச் சென்றிருந்ததால் தப்பியோடிய லோகேஸ்வரி என்ற பாதிக்கப்பட்டவர், தனது 18 ஆயிரம் ரிங்கிட் பணம், நகைகள் உள்ளிட்ட முக்கியப் பொருட்களை இழந்து கண்ணீர் மல்கினார்.

வீட்டில் தனியாக இருந்த ஜெயாவும் அவரது 18 வயது மகள் டி. ரீத்தாவும் வெளியிலிருந்து வந்த சத்தம் கேட்டுச் சுதாரித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உயிர் தப்பியுள்ளனர். சம்பவம் நடந்தபோது தனது ஏழு குடும்ப உறுப்பினர்களுடன் உறங்கத் தயாராகிக் கொண்டிருந்ததாகவும், அப்போது நடு வீட்டில் இருந்து தீ வெளிச்சத்தைக் கண்டதாகவும் கூறினார் 44 வயது கலைவாணி.

அருகிலிருந்த வீடுகளில் தீ பரவாமல் இருக்க, அண்டை வீட்டார் தீயணைப்புத் துறையினர் வரும் வரை தண்ணீரைப் பீய்ச்சி அடித்து உதவினர். இந்த விபத்து தொடர்பாக கோத்தா திங்கி நகராட்சி மண்டபத்தில் உள்ள தற்காலிக நிவாரண மையத்தில் 29 பேரும் தற்போது தங்கியுள்ளனர். விபத்துக்கான காரணமும் சேத மதிப்பீடு குறித்தும் தீயணைப்புத் துறையினர் விசாரித்து வருவதாக பேரா மாநிலத் தீயணைப்பு - மீட்புப் படையின் செயல்பாடுகளுக்கான இடைக்காலப் பொறுப்பதிகாரி ஷாஸ்லீன் முகமட் ஹனாஃபியா தெரிவித்தார்.

Related News

ஆபத்தான ஆன்லைன் வீடியோ கேம்கள்: வன்முறை உள்ளடக்கத்தால் குழந்தைகள் தீவிர முடிவுகளை எடுக்கும் அபாயம்!

ஆபத்தான ஆன்லைன் வீடியோ கேம்கள்: வன்முறை உள்ளடக்கத்தால் குழந்தைகள் தீவிர முடிவுகளை எடுக்கும் அபாயம்!

சட்டத்திற்குப் புறம்பான இணையச் சூதாட்டம்: டாமன்சாராவில் 7 மையங்களில் சோதனை, 147 பேர் கைது!

சட்டத்திற்குப் புறம்பான இணையச் சூதாட்டம்: டாமன்சாராவில் 7 மையங்களில் சோதனை, 147 பேர் கைது!

கேசாஸ் நெடுஞ்சாலையில் கோர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த 15 வயதுச் சிறுவன் பலி, மோதிவிட்டுத் தப்பியோடிய இருவர்!

கேசாஸ் நெடுஞ்சாலையில் கோர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த 15 வயதுச் சிறுவன் பலி, மோதிவிட்டுத் தப்பியோடிய இருவர்!

ஆசியான் மாநாடு: பாதையை மாற்றிய கார்; போக்குவரத்துக் காவற்படை அதிகாரி காயமடைந்தார்!

ஆசியான் மாநாடு: பாதையை மாற்றிய கார்; போக்குவரத்துக் காவற்படை அதிகாரி காயமடைந்தார்!

ஆசியான் மாநாடு: பாதுகாப்பு காரணங்களுக்காக சில Rapid KL நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன!

ஆசியான் மாநாடு: பாதுகாப்பு காரணங்களுக்காக சில Rapid KL நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன!

வெள்ளத்தின் பிடியில் இருந்து மீளும் கெடா: 10 நிவாரண மையங்கள் மூடப்பட்டு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்தது!

வெள்ளத்தின் பிடியில் இருந்து மீளும் கெடா: 10 நிவாரண மையங்கள் மூடப்பட்டு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்தது!