ஆடவர் ஒருவர் 13 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணமுற்றார். இச்சம்பவம் இன்று காலை 9.00 மணியளவில் நிகழ்ந்தது. அந்த ஆடவர் ரத்த வெள்ளத்தில் கிடைப்பதை கண்டு ஹோட்டல் பணியாளர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு தீயணைப்பு மீட்புப்படையினர் விரைந்தனர்.
அந்த ஹோட்டலில் தங்கியிருந்த 40 வயது மதிக்கத் தக்க அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டார். விசாரணைக்கு ஏதுவாக அந்த ஆடவரின் சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஈப்போ தீயணைப்பு, மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார்.








