அரசு ஊழியர்களுக்கு வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நல்ல செய்தி காத்திருப்பதாக கியூபெக்ஸ் எனப்படும் பொதுச் சேவை ஊழியர்களின் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்,அரசு ஊழியர்களின் புதிய சம்பள முறையை அறிவிக்கவிருக்கிறார் என்று எதிர்பார்க்கப்படுவதாக கியூபெக்ஸின் தலைவர் அட்னான் மாட் தெரிவித்தார்.
அரசு ஊழியர்களுக்கு ஆகக்கடைசியாக கடந்த 2002 ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட சிஸ்டம் சரணான் மலேசியா எனும் எஸ்.எஸ்.எம் புதிய சம்பள முறை இன்னமும் நடப்பு சம்பள உயர்வில் ஓர் அளவுக்கோலாக பயன்படுத்தப்பட்டு வருவதையும் அட்னான் மாட் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் அறிவிக்கவிருக்கும் புதிய சம்பளத்திட்டமானது , அரசு ஊழியர்கள் மீது அது கொண்டுள்ள கடப்பாட்டை நிரூபிப்பதாக உள்ளது என்று அட்னான் மாட் விளக்கினார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


