அரசு ஊழியர்களுக்கு வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நல்ல செய்தி காத்திருப்பதாக கியூபெக்ஸ் எனப்படும் பொதுச் சேவை ஊழியர்களின் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்,அரசு ஊழியர்களின் புதிய சம்பள முறையை அறிவிக்கவிருக்கிறார் என்று எதிர்பார்க்கப்படுவதாக கியூபெக்ஸின் தலைவர் அட்னான் மாட் தெரிவித்தார்.
அரசு ஊழியர்களுக்கு ஆகக்கடைசியாக கடந்த 2002 ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட சிஸ்டம் சரணான் மலேசியா எனும் எஸ்.எஸ்.எம் புதிய சம்பள முறை இன்னமும் நடப்பு சம்பள உயர்வில் ஓர் அளவுக்கோலாக பயன்படுத்தப்பட்டு வருவதையும் அட்னான் மாட் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் அறிவிக்கவிருக்கும் புதிய சம்பளத்திட்டமானது , அரசு ஊழியர்கள் மீது அது கொண்டுள்ள கடப்பாட்டை நிரூபிப்பதாக உள்ளது என்று அட்னான் மாட் விளக்கினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


