அரசு ஊழியர்களுக்கு வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நல்ல செய்தி காத்திருப்பதாக கியூபெக்ஸ் எனப்படும் பொதுச் சேவை ஊழியர்களின் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்,அரசு ஊழியர்களின் புதிய சம்பள முறையை அறிவிக்கவிருக்கிறார் என்று எதிர்பார்க்கப்படுவதாக கியூபெக்ஸின் தலைவர் அட்னான் மாட் தெரிவித்தார்.
அரசு ஊழியர்களுக்கு ஆகக்கடைசியாக கடந்த 2002 ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட சிஸ்டம் சரணான் மலேசியா எனும் எஸ்.எஸ்.எம் புதிய சம்பள முறை இன்னமும் நடப்பு சம்பள உயர்வில் ஓர் அளவுக்கோலாக பயன்படுத்தப்பட்டு வருவதையும் அட்னான் மாட் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் அறிவிக்கவிருக்கும் புதிய சம்பளத்திட்டமானது , அரசு ஊழியர்கள் மீது அது கொண்டுள்ள கடப்பாட்டை நிரூபிப்பதாக உள்ளது என்று அட்னான் மாட் விளக்கினார்.

Related News

முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 4 பண மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்த இருவரும் விசாரணை கோரினர்

Grok மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தது X நிறுவனம் - ஃபாமி ஃபாட்சீல் தகவல்

தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச படகு சவாரி

ஆயுதப்படைகளில் சீர்த்திருத்தங்களும், துடைத்தொழிப்பு நடவடிக்கையும் அவசியம் – அன்வார் வலியுறுத்து

வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை DIPN குறைக்கிறது: காலிட் நோர்டின்


