கோலாலம்பூர், அக்டோபர் 01-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM இன்று அக்டோபர் முதல் தேதி, 57 ஆவது நிறைவு விழாவை கொண்டாடுகிறது. இதனையொட்டி மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், அந்த லஞ்ச ஊழல் துடைத்தொழிப்பு ஆணையத்திற்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
ACA ( ஏ.சி.ஏ.) என்ற பெயரில் கடந்த 1967 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி நிறுவப்பட்ட ஊழல் தடுப்பு நிறுவனம், பின்னர் MACC அல்லது SPRM என்று பெயர் மாற்றம் கண்டது.
நாட்டில் லஞ்ச ஊழலை வேரறுப்பதற்கு அயராது பாடுபட்டு வரும் SPRM பணியாளர்கள் அனைவருக்கும் இந்த நன்னாளில் தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்ளவதாக மாமன்னன் சுல்தான் இப்ராஹிம் தமது அதிகாரத்துவ முகநூலில் பதிவேற்றம் செய்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.








