சரவாக் மாநிலம் பிந்துலு நகருக்குள் கடத்த முயன்ற 80 கிலோவுக்கும் அதிகமான மெத்தாம்பெட்டமைன் வகை போதை பொருளை அம்மாநில போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதன் மதிப்பு சுமார் 40 லட்சம் ரிங்கிட் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சரவாக் மாநில சுங்கத் துறை இயக்குநர் நோரிஸான் யாஹ்யா கூறுகையில், “பூனைக்கான மணல்” எனக் குறிப்பிடப்பட்ட பார்சல்கள் மீது ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் 12 நாட்கள் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும், பின்னர் சோதனை செய்த போது, பார்சல்களுக்குள் மெத்தாம்பெட்டமைன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
கூரியர் சேவை மூலம் இந்த போதைப்பொருளை பிந்துலு பகுதிக்குள் கொண்டு வந்து, பூனை மணல் எனப் பொய்யாகக் குறிப்பிட்டு, போலி பெறுநர் விவரங்களையும் பயன்படுத்தி கடத்தல் கும்பல் தப்பிக்க முயன்றது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு அபாயகரமான போதைப் பொருள் சட்டம் 1952, பிரிவு 39B(1) கீழ் விசாரிக்கப்படுகிறது.








