Sep 15, 2026
Thisaigal NewsYouTube
விமானத்தின் சக்கரப் பகுதியில் சடலம்! புகைப்படத்தை வெளியிட்டது போலீஸ்
தற்போதைய செய்திகள்

விமானத்தின் சக்கரப் பகுதியில் சடலம்! புகைப்படத்தை வெளியிட்டது போலீஸ்

Share:

தோக்யோ, ஜப்பானில் இருந்து கேஎல்ஐஏ முனையம் 2-ற்கு வந்த விமானத்தின் சக்கரப் பகுதியில், அடையாளம் தெரியாத ஆடவர் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவரது புகைப்படத்தைப் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி விமானம் தரையிறங்கிய போது, துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து பொறியியல் குழுவினர் சோதனை செய்ததில் அச்சடலமானது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து கேஎல்ஐஏ மாவட்ட போலீஸ் தலைவர் எம். ரவி கூறுகையில், உயிரிழந்தவரின் புகைப்படம் போலீசாரிடம் கிடைத்துள்ள போதிலும், அவரது அடையாளம் இதுவரை தெரியவில்லை என்றார்.

அவர் 72 மணி நேரத்துக்கும் மேலாக உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படும் நிலையில், அவரிடம் எந்த அடையாள ஆவணங்களும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் காணாமல் போனவர்கள் அல்லது தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பவர்கள் குறித்து தகவல் உள்ளவர்கள், குறிப்பாக கேஎல்ஐஏ பகுதியில் இருந்தவர்கள், அருகிலுள்ள போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related News

முகைதீன் யாசின் ஊழல் வழக்கில் ரகசிய ஆவணம் வெளியானதா? எஸ்பிஆர்எம் அதிகாரி போலீசில் புகார்

முகைதீன் யாசின் ஊழல் வழக்கில் ரகசிய ஆவணம் வெளியானதா? எஸ்பிஆர்எம் அதிகாரி போலீசில் புகார்

சரவாக்கில் பூனை மணல் எனக் கூறி 80 கிலோ போதைப்பொருள் கடத்த முயற்சி

சரவாக்கில் பூனை மணல் எனக் கூறி 80 கிலோ போதைப்பொருள் கடத்த முயற்சி

நஜிப்பின் மன்னிப்பு மனு ஒத்திவைக்கப்பட்டது மாமன்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டது: அன்வார்

நஜிப்பின் மன்னிப்பு மனு ஒத்திவைக்கப்பட்டது மாமன்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டது: அன்வார்

கெடாவில் குளத்தில் விழுந்த கால்பந்தை எடுக்க முயன்ற 4 சிறுவர்கள் உயிரிழப்பு

கெடாவில் குளத்தில் விழுந்த கால்பந்தை எடுக்க முயன்ற 4 சிறுவர்கள் உயிரிழப்பு

கூலிமில் குடும்பத் தகராறு விபரீதம்: 13 முறை கத்தியால் குத்தப்பட்ட 39 வயது பெண் உயிரிழப்பு; கணவர் காவல்நிலையத்தில் சரண்!

கூலிமில் குடும்பத் தகராறு விபரீதம்: 13 முறை கத்தியால் குத்தப்பட்ட 39 வயது பெண் உயிரிழப்பு; கணவர் காவல்நிலையத்தில் சரண்!

தாமான் தேசா காயாங்கான் கால்வாயில் 4 சிறுவர்கள் தவறி விழுந்து விபரீதம் — 2 பேர் உயிரிழப்பு; 2 பேர் மருத்துவமனையில்!

தாமான் தேசா காயாங்கான் கால்வாயில் 4 சிறுவர்கள் தவறி விழுந்து விபரீதம் — 2 பேர் உயிரிழப்பு; 2 பேர் மருத்துவமனையில்!