Mar 12, 2026
Thisaigal NewsYouTube
வாடகை செலுத்தாமல் அலட்சியம்செய்யும் பிஏ, பிபிஆர் வீடுகளுக்கு நீர் விநியோகத் தடை -- டிபிகேஎல் நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

வாடகை செலுத்தாமல் அலட்சியம்செய்யும் பிஏ, பிபிஆர் வீடுகளுக்கு நீர் விநியோகத் தடை -- டிபிகேஎல் நடவடிக்கை

Share:

பெருமஹான் அவாம், ப்ரோஜெக் பெருமாஹான் ராக்யாட் எனப்படும் மக்கள் குடியிருப்புத் திட்ட வீடுகளின் வாடகையைச் செலுத்தாமல் அலட்சியம் செய்யப்பட்டால், அவ்வீடுகளுக்கு நீர் விநியோகத்தை கோலாலம்பூர் மாநகர் மன்றம் டிபிகேஎல் தடை செய்துள்ளது.

இதற்கு முன்னர் பிபிஆர் பெர்காசா, பிபிஆர் ஶ்ரீ அலாம் ஆகிய வீடமைப்புப் பகுதிகளில் இவ்வாறான நடவடிக்கையை எடுத்த டிபிகேஎல், தற்போது பிபிஆர் முஹிபாவுக்கும் விரிவு படுத்தி உள்ளது.

நினைவூட்டல் கடிதம் கொடுத்தும் வாடகையைச் செலுத்தாதவர்களுக்கு எதிராக இந்தக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதாக அம்மன்றம் குறிப்பிட்டது.

செலுத்தப்படாமல் இருக்கும் வாடகையை முழுமையாக செலுத்திய பின்னரே அவ்வீடுகளுக்கு நீர் விநியோகிப்புக்கானத் தடை அகற்றப்படும் எனவும் டிபிகேஎல் தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

அதே சமயம், மற்ற பிபிஆர் வீடமைப்புத் திட்டங்களிலும் இது குறித்த கண்காணிப்பு மேற்கொள்ளபடும் எனவும், தேவைப்படுமேயானால், அவ்வாறான கடுமையான நடவடிக்கையை எடுக்கப்படலாம் எனவும் அம்மன்றம் கூறியது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!