Aug 2, 2026
Thisaigal NewsYouTube
வாடகை செலுத்தாமல் அலட்சியம்செய்யும் பிஏ, பிபிஆர் வீடுகளுக்கு நீர் விநியோகத் தடை -- டிபிகேஎல் நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

வாடகை செலுத்தாமல் அலட்சியம்செய்யும் பிஏ, பிபிஆர் வீடுகளுக்கு நீர் விநியோகத் தடை -- டிபிகேஎல் நடவடிக்கை

Share:

பெருமஹான் அவாம், ப்ரோஜெக் பெருமாஹான் ராக்யாட் எனப்படும் மக்கள் குடியிருப்புத் திட்ட வீடுகளின் வாடகையைச் செலுத்தாமல் அலட்சியம் செய்யப்பட்டால், அவ்வீடுகளுக்கு நீர் விநியோகத்தை கோலாலம்பூர் மாநகர் மன்றம் டிபிகேஎல் தடை செய்துள்ளது.

இதற்கு முன்னர் பிபிஆர் பெர்காசா, பிபிஆர் ஶ்ரீ அலாம் ஆகிய வீடமைப்புப் பகுதிகளில் இவ்வாறான நடவடிக்கையை எடுத்த டிபிகேஎல், தற்போது பிபிஆர் முஹிபாவுக்கும் விரிவு படுத்தி உள்ளது.

நினைவூட்டல் கடிதம் கொடுத்தும் வாடகையைச் செலுத்தாதவர்களுக்கு எதிராக இந்தக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதாக அம்மன்றம் குறிப்பிட்டது.

செலுத்தப்படாமல் இருக்கும் வாடகையை முழுமையாக செலுத்திய பின்னரே அவ்வீடுகளுக்கு நீர் விநியோகிப்புக்கானத் தடை அகற்றப்படும் எனவும் டிபிகேஎல் தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

அதே சமயம், மற்ற பிபிஆர் வீடமைப்புத் திட்டங்களிலும் இது குறித்த கண்காணிப்பு மேற்கொள்ளபடும் எனவும், தேவைப்படுமேயானால், அவ்வாறான கடுமையான நடவடிக்கையை எடுக்கப்படலாம் எனவும் அம்மன்றம் கூறியது.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு