Mar 27, 2026
Thisaigal NewsYouTube
போலி ஆவணங்களை தயாரிக்கும் கும்பல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

போலி ஆவணங்களை தயாரிக்கும் கும்பல் முறியடிப்பு

Share:

புத்ராஜெயா,செப்டம்பர் 10-

குடிநுழைவுத்துறை தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் மற்றும் முத்திரைகளை போலியாக தயாரித்து வந்ததாக நம்பப்படும் பாகிஸ்தான் ஆடவர்களை பின்னணியாக கொண்ட ஒரு கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து கிள்ளான் பள்ளத்தாக்கில் தீவிரமாக செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் இக்கும்பலைச் சேர்ந்த ஒரு பாகிஸ்தான் ஆடவரும், ஓர் இந்தியப்பிரஜையான மாது ஒருவரும் சுபாங் ஜெயாவில் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ரஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.

இவ்விருவரும் கொடுத்த தகவலைத் தொடர்ந்து போலி ஆவணங்கள் மற்றும் முத்திரைகளை தயாரிப்பதில் மூளையாக இருந்து செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் அசார் என்று மட்டுமே அடையாளம் கூறப்பட்ட பாகிஸ்தான் ஆடவரை குடிநுழைவுத்துறை கடந்த வாரம் கோலாலம்பூரில் கைது செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த கும்பல் பிடிபட்டது மூலம் போலியான தற்காலிக வேலை பெர்மிட், குடிநுழைவு அனுமதி மற்றும் வெளியேற்றத்திற்கான 28 முத்திரைகள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கடப்பிதழ்கள், கணினி, மடிக்கணினி, அச்சு இயந்திரம் உட்பட முக்கியப் பொருட்களை குடிநுழைவுத்துறை கைப்பற்றியுள்ளதாக டத்தோ ரஸ்லின் தெரிவித்தார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

போலி ஆவணங்களை தயாரிக்கும் கும்பல் முறியடிப்பு | Thisaigal News