பிதிபிதிஎன் கடன் பெறுபவர்களுக்கு 15 விழுக்காடு வரை கழிவு வழங்குவதுடன் பல்வேறு சலுகைகளும் காத்து கொண்டிருக்கின்றன. டிசம்பர் 12 தொடங்கி டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஹரி மெஸ்ரா பெலாங்ஙான் நாளை முன்னிட்டு பிதிபிதிஎன் இன் ஜோம் பாயார் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முகாமில் பிதிபிதிஎன் கடன் இன்னும் கட்டாமல் இருப்பவர்கள் குறைந்தது 300 வெள்ளியை முன்கட்டணமாக செலுத்தும் வாய்ப்பும் இருக்கின்றன.பிதிபிதிஎன் கடன் பெறுபவர்களுக்கு சபுத்தான் ஜோம் பாயார் பிதிபிதிஎன் நிகழ்வும் ஏற்பாடு செய்துள்ளனர். 70,000 வெள்ளி மதிபிலான ரொக்க பரிசுகளும் காத்துக் கொண்டிருப்பதாக நிர்வாக தலைவர் அஹ்மாட் டசுக்கி அப்துல் மஜிட் தெரிவித்தார்.
பிதிபிதிஎன் கடனை திருப்பி செலுத்துவதை ஊக்குவிக்கவும், சேவை தரத்தை மேம்படுத்தவும் ஹரி மெஸ்ர பெலாங்ஙான் பிதிபிதிஎன் தினம் நேற்று முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து பிதிபிதிஎன் மாநில அலுவலகங்களில் செயல்படுத்தப்பட்டதாக அஹ்மாட் டசுக்கி கூறினார்.







