May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கலப்பு அரிசி விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது

Share:

ஜன.15-

உள்நாட்டு அரிசி உற்பத்தியாளர்கள் 2008-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையான 10 கிலோவுக்கு 26 ரிங்கிட் என்ற விலையில் அரிசி விற்பனை செய்வதில் சிரமம் இருப்பதாக புகார் அளித்ததால், கலப்பு அரிசி விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. நெல், அரிசி கட்டுப்பாட்டுச் சட்டத்தில் இதற்குத் தடை இல்லை என்றும், மலேசிய போட்டித்தன்மை ஆணையமான MyCC இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது என்றும் விவசாயம், உணவு பாதுகாப்பு அமைச்சர் முகமட் சாபு தெரிவித்தார். கலப்பு அரிசி விற்பனைக்கு அனுமதி அளிப்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த ஆய்வின் முடிவுகள் விரைவில் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

விவசாயிகளின் நலனை முதன்மையாகக் கொண்டு முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அதே நேரத்தில் அதிக அரிசி விலையால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாற்று வழிகள் ஆராயப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். உற்பத்தியாளர்கள் பின்பற்ற வேண்டிய குறைந்தபட்ச நெல் கொள்முதல் விலை 1,300 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்படும் என்றும், அதிகபட்ச விலையில் அரசாங்கம் தலையிடாது என்றும் அவர் கூறினார். இதன் மூலம், நெல் கொள்முதலில் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் என்றும் பயனீட்டாளர்களும் அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது என்றும் எதிர்பார்க்கப்படுவதாக முகம்மட் சாபு தெரிவித்தார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்