நேற்று நடந்த அம்னோ உச்சமன்ற சந்திப்புக் கூட்டத்தில், அதன் உறுப்பினர்களுள் ஒருவரான தாம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக இஷாம் ஜலிலுக்குத் தெரிய வந்ததாக அவர் தெரிவித்தார்.
ஆனால், மதியம் 1.40 மணி வரையில் எந்தவிதமான அதிகாரப்பூர்வக் கடிதமும் கிடைக்கப்பெற வில்லை என இஷாம் ஜலில் உறுதிப்படுத்தினார். ஆனால், அம்னோ உச்சமன்ற புலனக் குழுவில் இருந்து தாம் நீக்கப்பட்டு விட்டதாகவும் சொன்னார்.
ஆனால், அம்னோ - டிஏபி ஒத்துழைப்பு குறித்து இஷாம் ஜலில் எதிராக கருத்துரைத்தது தொடர்பில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக நேற்று இரவு நடந்த சந்திப்புக் கூட்டத்திற்கு வந்த 3 உச்சமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ஆனால், இஷாம் ஜலில் அம்னோ கட்சியில் இருந்து நீக்கட்டதாகக் குறிப்பிட்டு எந்தவித அதிகாரப்பூர்வக் கடிதமும் வெளியிடப்பட வில்லை.








