May 27, 2026
Thisaigal NewsYouTube
33 வயது பெண்ணை தீயணைப்பு – மீட்புப் படை வீரர்கள் வெற்றிகரமாக காப்பாற்றினர்
தற்போதைய செய்திகள்

33 வயது பெண்ணை தீயணைப்பு – மீட்புப் படை வீரர்கள் வெற்றிகரமாக காப்பாற்றினர்

Share:

டிச. 29-

நேற்று ஸ்ரீ பெட்டாலிங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து குதிக்க முயன்ற 33 வயது பெண்ணை தீயணைப்பு – மீட்புப் படை வீரர்கள் வெற்றிகரமாக காப்பாற்றினர். இந்த சம்பவம் நேற்று காலை 11.59 மணியளவில் நிகழ்ந்துள்ளது என தீயணைப்பு – மீட்புப் படை அதிகாரி Rosmawi Ismail தெரிவித்தார்.

புக்கிட் ஜாலில் தீயணைப்பு - மீட்பு படை நிலையத்தைச் சேர்ந்த ஏழு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். காவல்துறையினரும் சம்பவ இடத்தில் இருந்து பாதிக்கப்பட்டவரை சமாதானப்படுத்த உதவினர்.

பாதிக்கப்பட்ட பெண் இறுதியில் சமாதானப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக மீட்கப்பட்டார். பின்னர் அவர் மேலதிக விசாரணைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்டவர் வீட்டின் பின்புறத்திலிருந்து குதிக்க முயன்றதால், தீயணைப்பு வீரர்கள் அவ்வீட்டின் முன்வாசல் பூட்டை வெட்ட வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு