கூச்சிங், நவ. 19-
பதினாறு வயது இளம் பெண் ஒருவர் கட்டடம் ஒன்றிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக மாண்டார். இச்சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் சரவாக், கூச்சிங், ஜாலான் பத்து காவாவில் நிகழ்ந்தது.
தலையிலும், உடலிலும் கடும் காயங்களுக்கு ஆளான அந்த இளம் பெண் சம்பவ இடத்திலேயே மாண்டதாக Padawan மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் இர்வான் முகமட் ராட்ஷி தெரிவித்தார்.
அந்த இளம் பெண்ணின் இறப்பை, திடீர் மரணம் என்று தாங்கள் வகைப்படுத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.








