May 21, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியையிடம் கொள்ளை
தற்போதைய செய்திகள்

பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியையிடம் கொள்ளை

Share:

பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியையின் காரை வேண்டுமென்றே டோயோட்டா கேம்ரி வாகனத்தில் மோதிய ஆடவன் ஒருவன் , பின்னர் அந்த ஆசிரியையை மடக்கி, ரொக்கப்பணம் உட்பட அந்த ஆசிரியைக்கு சொந்தமான 2 ஆயிரம் வெள்ளி ஆபரணங்களுடன் கைப்பையை பறித்துக்கொண்டு தப்பினான்.

இச்சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் சண்டாக்கான், ஜம்பாத்தான் மேரா, ஜாலான் உத்தாரா சாலை சந்திப்பில் நிகழ்ந்தது. தனது காரை வாகனம் ஒன்று மோதியதை உணர்ந்து அந்த ஆசிரியை தனது காரை நிறுத்தியுள்ளார்.

அப்போது ஆசிரியையின் காரை நோக்கி ஓடி வந்த ஆடவன் ஒருவன், அந்த ஆசிரியையை தாக்குவதற்கு முற்பட்டுள்ளான். . அப்போது அந்த நபருடன் ஆசிரியை தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட போது, அவரை கீழே தள்ளிவிட்டு, காரின் முன் இருக்கையில் வைத்திருந்த கைப்பையை பறித்துக்கொண்டு அந்த நபர் தப்பிச் சென்றுள்ளான்.

எவ்வித காயத்திற்கு ஆளாகாத அந்த ஆசிரியை பின்னர் இது குறித்து சண்டக்கான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Related News