Dec 3, 2025
Thisaigal NewsYouTube
10 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு சொக்சோ பாதுகாப்புச் சலுகை
தற்போதைய செய்திகள்

10 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு சொக்சோ பாதுகாப்புச் சலுகை

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.29-

சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் கீழ் தற்போது 10 மில்லியனுக்கும் அதிகமானோருக்குச் சமூகவியல் பாதுகாப்பு சலுகை வழங்கப்படுகிறது என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

சொக்சோ வரலாற்றில் கடந்த பத்து ஆண்டுகளில் இது 63 விழுக்காடு உயர்வாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட சுயதொழில் புரிகின்றவர்களுக்கான சொக்சோ திட்டத்தின் வாயிலாக பத்து லட்சத்திற்கும் அதிகமானோர், புதிய சந்தாதாரர்களாக அந்த சமூக பாதுகாப்பு நிறுவனத்தில் தங்களைப் பிணைத்துக் கொண்டுள்ளனர் என்று அமைச்சர் விளக்கினார்.

சந்தாதாரர்களுக்குச் செலுத்தப்படும் வட்டி விகிதமும் உயர்ந்து இருப்பதாக ஸ்டீவன் சிம் சுட்டிக் காட்டினார். கடந்த பத்து ஆண்டுகளில் குறிப்பாக, 2015 ஆம் ஆண்டில் 5 ஆயிரத்து 200 ரிங்கிட்டாக இருந்த வட்டி விகிதம் இவ்வாண்டில் 5 ஆயிரத்து 800 ரிங்கிட்டாக உயர்வு கண்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

தவிர சொக்சோ சட்டத்தில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தின் மூலம் சந்தாதாரர்களுக்கான அனுகூல விகிதம் மேலும் 20 விழுக்காடு அதிகரித்து இருப்பதாக ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்