Jul 2, 2026
Thisaigal NewsYouTube
10 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு சொக்சோ பாதுகாப்புச் சலுகை
தற்போதைய செய்திகள்

10 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு சொக்சோ பாதுகாப்புச் சலுகை

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.29-

சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் கீழ் தற்போது 10 மில்லியனுக்கும் அதிகமானோருக்குச் சமூகவியல் பாதுகாப்பு சலுகை வழங்கப்படுகிறது என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

சொக்சோ வரலாற்றில் கடந்த பத்து ஆண்டுகளில் இது 63 விழுக்காடு உயர்வாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட சுயதொழில் புரிகின்றவர்களுக்கான சொக்சோ திட்டத்தின் வாயிலாக பத்து லட்சத்திற்கும் அதிகமானோர், புதிய சந்தாதாரர்களாக அந்த சமூக பாதுகாப்பு நிறுவனத்தில் தங்களைப் பிணைத்துக் கொண்டுள்ளனர் என்று அமைச்சர் விளக்கினார்.

சந்தாதாரர்களுக்குச் செலுத்தப்படும் வட்டி விகிதமும் உயர்ந்து இருப்பதாக ஸ்டீவன் சிம் சுட்டிக் காட்டினார். கடந்த பத்து ஆண்டுகளில் குறிப்பாக, 2015 ஆம் ஆண்டில் 5 ஆயிரத்து 200 ரிங்கிட்டாக இருந்த வட்டி விகிதம் இவ்வாண்டில் 5 ஆயிரத்து 800 ரிங்கிட்டாக உயர்வு கண்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

தவிர சொக்சோ சட்டத்தில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தின் மூலம் சந்தாதாரர்களுக்கான அனுகூல விகிதம் மேலும் 20 விழுக்காடு அதிகரித்து இருப்பதாக ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

Related News

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு