Mar 20, 2026
Thisaigal NewsYouTube
10 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு சொக்சோ பாதுகாப்புச் சலுகை
தற்போதைய செய்திகள்

10 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு சொக்சோ பாதுகாப்புச் சலுகை

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.29-

சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் கீழ் தற்போது 10 மில்லியனுக்கும் அதிகமானோருக்குச் சமூகவியல் பாதுகாப்பு சலுகை வழங்கப்படுகிறது என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

சொக்சோ வரலாற்றில் கடந்த பத்து ஆண்டுகளில் இது 63 விழுக்காடு உயர்வாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட சுயதொழில் புரிகின்றவர்களுக்கான சொக்சோ திட்டத்தின் வாயிலாக பத்து லட்சத்திற்கும் அதிகமானோர், புதிய சந்தாதாரர்களாக அந்த சமூக பாதுகாப்பு நிறுவனத்தில் தங்களைப் பிணைத்துக் கொண்டுள்ளனர் என்று அமைச்சர் விளக்கினார்.

சந்தாதாரர்களுக்குச் செலுத்தப்படும் வட்டி விகிதமும் உயர்ந்து இருப்பதாக ஸ்டீவன் சிம் சுட்டிக் காட்டினார். கடந்த பத்து ஆண்டுகளில் குறிப்பாக, 2015 ஆம் ஆண்டில் 5 ஆயிரத்து 200 ரிங்கிட்டாக இருந்த வட்டி விகிதம் இவ்வாண்டில் 5 ஆயிரத்து 800 ரிங்கிட்டாக உயர்வு கண்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

தவிர சொக்சோ சட்டத்தில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தின் மூலம் சந்தாதாரர்களுக்கான அனுகூல விகிதம் மேலும் 20 விழுக்காடு அதிகரித்து இருப்பதாக ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து