May 28, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு பாகிஸ்தான் பிரஜைகளுக்குத் தூக்கு
தற்போதைய செய்திகள்

இரண்டு பாகிஸ்தான் பிரஜைகளுக்குத் தூக்கு

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.10-

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 191.28 கிலோகிராம் கெத்தாமின் போதைப் பொருளைக் கடத்திய குற்றத்திற்காக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இரண்டு பாகிஸ்தான் பிரஜைகளுக்கு இன்று தூக்குத் தண்டனை விதித்தது.

60 வயது அப்துல் வாஹாப் மற்றும் 52 வயது முகமட் ராபிஃக் ஆகிய இரண்டு பாகிஸ்தானியர்களும், தங்களின் தற்காப்பு வாதத்தில், போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், நியாயமான சந்தேகங்களை எழுப்புவதில் தோல்விக் கண்டதாக நீதிபதி அஸார் அப்துல் ஹாமிட் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் கிள்ளான், தாமான் தெலுக் காடோங் இண்டா, மற்றும் கோலாலம்பூர், டாங் வாங்கி, ஜாலான் முன்ஷி அப்துல்லா ஆகிய பகுதிகளில் மொத்தம் 191.28 கிலோகிராம் போதைப் பொருளைக் கடத்தியதாக இரு பாகிஸ்தான் ஆடவர்களும் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்