டிசம்பர் 3 முதல் டிசம்பர் 9 ஆம் தேதி வரையிலான 49ஆவது தொற்றுநோயியல் தடுப்பு வாரத்தில் (ME49) டிங்கி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,948 -ஆக குறைந்துள்ளது.
இவை முந்தைய வாரத்தினை காட்டிலும் 1.3 விழுக்காடு குறைந்த அளவிலேயே பதிவாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டினை ஒப்பீடுகையில் இவ்வாண்டு 90.3 விழுக்காடு டிங்கி காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதாக சுகாதார அதிகாரி டத்தோ டாக்டர் முஹமாட் ரட்சி அபு ஹாஸ்ஸான் தெரிவித்தார்.
ஒரே வாரத்தில் டிங்கியினால் 3 பேர் இறந்துள்ளதாகவும், இவ்வாண்டு மொத்தம் 87 பேர் அந்நோயால் உயிரிழந்ததாக முஹமாட் ரட்சி கூறினார்.
காய்ச்சல், தலைவலி, கண்வலி, தசை அல்லது மூட்டு வலி போன்ற அறிகுறிகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ளுமாறு முஹமாட் ரட்சி பொது மக்களை வலியுறுத்தினார்.








