ஆகஸ்ட் 04-
கடந்த காலத்தில் செயல்பட்டு வந்த PAKATAN HARAPAN கட்சியில் தற்போது பல பாராட்டத்தக்க மாற்றங்கள் இருப்பதாக அம்னோ துணைத் தலைவர் DATUK SERI MOHAMED KHALED NORDIN தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில், மலாய்காரர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் முடிவுகளை PAKATAN HARAPAN எடுத்திருந்த சூழலில், தற்போது PH உடனான ஒற்றுமை அரசாங்கத்தில் UMNO இருப்பதால் அத்தகைய முடிவுகள் எடுக்கப்படுவதில்லை என்று அவர் கூறினார்.
மேலும், ஒற்றுமை அரசாங்கம் நாட்டின் அரசியலமைப்பைப் பாதிக்காமல் இருப்பதை அம்னோ எவ்வேளையிலும் உறுதி செய்யும் என்று DATUK SERI MOHAMED KHALED NORDIN உத்தரவாதம் அளித்துள்ளார்.
அதோடு, அம்னோ மீதான மலாய்க்காரர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க அம்னோ தொடர்ந்து முயற்சிக்கும் என்றார் அவர்.








