Jul 1, 2026
Thisaigal NewsYouTube
தங்காப் ஆசம் பாக்கி போராட்டம்: பட்டாசு வெடித்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
தற்போதைய செய்திகள்

தங்காப் ஆசம் பாக்கி போராட்டம்: பட்டாசு வெடித்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

Share:

கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற 'தங்காப் ஆசம் பாக்கி' போராட்டத்தின் போது பட்டாசு வெடித்துக் கலவரத்தைத் தூண்ட முயன்ற நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இது குறித்துப் பேசிய டாங் வாங்கி மாவட்டப் போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் சசாலி ஆடம், 1957 ஆம் ஆண்டு வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் போராட்டத்தைச் சீர்குலைக்க நடத்தப்பட்ட சதியா என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும், இதில் தொடர்புடைய நபர்களை அடையாளம் காணும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தச் சம்பவத்தால் இதுவரை பொதுமக்கள் அல்லது வணிகர்களிடமிருந்து எந்தவொரு புகாரும் வரவில்லை என்றாலும், ஆதாரங்களைத் திரட்டி குற்றவாளிகளைக் கைது செய்யத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சசாலி ஆடம் விளக்கினார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை