Apr 25, 2026
Thisaigal NewsYouTube
தங்காப் ஆசம் பாக்கி போராட்டம்: பட்டாசு வெடித்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
தற்போதைய செய்திகள்

தங்காப் ஆசம் பாக்கி போராட்டம்: பட்டாசு வெடித்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

Share:

கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற 'தங்காப் ஆசம் பாக்கி' போராட்டத்தின் போது பட்டாசு வெடித்துக் கலவரத்தைத் தூண்ட முயன்ற நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இது குறித்துப் பேசிய டாங் வாங்கி மாவட்டப் போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் சசாலி ஆடம், 1957 ஆம் ஆண்டு வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் போராட்டத்தைச் சீர்குலைக்க நடத்தப்பட்ட சதியா என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும், இதில் தொடர்புடைய நபர்களை அடையாளம் காணும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தச் சம்பவத்தால் இதுவரை பொதுமக்கள் அல்லது வணிகர்களிடமிருந்து எந்தவொரு புகாரும் வரவில்லை என்றாலும், ஆதாரங்களைத் திரட்டி குற்றவாளிகளைக் கைது செய்யத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சசாலி ஆடம் விளக்கினார்.

Related News

பொதுமக்களின் பணம் இனி பாதுகாப்பாக இருக்கும்! தொண்டு நிறுவனங்களுக்குப் புதிய கிடுக்கிப்பிடி

பொதுமக்களின் பணம் இனி பாதுகாப்பாக இருக்கும்! தொண்டு நிறுவனங்களுக்குப் புதிய கிடுக்கிப்பிடி

ஒரே நாடு, ஒரே தேர்தல்": பிரதமர் அன்வாரின் கருத்துக்கு சனுசி அதிரடி ஆதரவு

ஒரே நாடு, ஒரே தேர்தல்": பிரதமர் அன்வாரின் கருத்துக்கு சனுசி அதிரடி ஆதரவு

வெடித்தது எரிவாயு குழாயா? குவாந்தானில் பரவிய வீடியோவால் பரபரப்பு: தீயணைப்புத் துறை விளக்கம்

வெடித்தது எரிவாயு குழாயா? குவாந்தானில் பரவிய வீடியோவால் பரபரப்பு: தீயணைப்புத் துறை விளக்கம்

சுட்டெரிக்கும் வெயில்: 41 பேருக்கு பாதிப்பு! மலேசியாவில் 'வெப்ப வாத தாக்குதல்' எச்சரிக்கை

சுட்டெரிக்கும் வெயில்: 41 பேருக்கு பாதிப்பு! மலேசியாவில் 'வெப்ப வாத தாக்குதல்' எச்சரிக்கை

3 முறை பதவி நீட்டிப்பு எனக்குக் கிடைத்த கௌரவம்!" - ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் ஆசாம் பாக்கி உருக்கம்

3 முறை பதவி நீட்டிப்பு எனக்குக் கிடைத்த கௌரவம்!" - ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் ஆசாம் பாக்கி உருக்கம்

நீதித்துறையின் சிங்கம் இனி ஊழல் தடுப்புப் படையின் நாயகன்: பிரதமர் அன்வார் வர்ணனை

நீதித்துறையின் சிங்கம் இனி ஊழல் தடுப்புப் படையின் நாயகன்: பிரதமர் அன்வார் வர்ணனை