Jul 2, 2026
Thisaigal NewsYouTube
சிகாமட் நில நடுக்கம்: சேதமடைந்த 62 வீடுகளுக்கு தலா 3000 ரிங்கிட் உதவித் தொகை!
தற்போதைய செய்திகள்

சிகாமட் நில நடுக்கம்: சேதமடைந்த 62 வீடுகளுக்கு தலா 3000 ரிங்கிட் உதவித் தொகை!

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.17-

ஜோகூர் சிகாமட்டில் அண்மையில் ஏற்பட்ட தொடர் நில நடுக்கத்தினால், அப்பகுதியைச் சேர்ந்த 62 வீடுகளில் சிறிய அளவிலான விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், அவ்வீடுகளில் வசிப்பவர்களுக்கு உதவும் வகையில், ஜோகூர் மாநில அரசு, அவர்களுக்குத் தலா 3000 ரிங்கிட் உதவித் தொகையாக வழங்க முடிவெடுத்துள்ளது.

அதே வேளையில், சேதமடைந்த அவ்வீடுகளை ஆய்வு செய்த பொதுப் பணித்துறை அதிகாரிகள், அவை தொடர்ந்து பயன்படுத்தத் தகுதியானவை தான் என உறுதியளித்திருப்பதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி அண்மையில் நடைபெற்ற மாநில சட்டமன்றக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், சிகாமட்டில் 9 அரசாங்கக் கட்டிடங்களும், 2 மசூதிகளும் நில நடுக்கத்தில் சேதமடைந்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்