Mar 21, 2026
Thisaigal NewsYouTube
சிகாமட் நில நடுக்கம்: சேதமடைந்த 62 வீடுகளுக்கு தலா 3000 ரிங்கிட் உதவித் தொகை!
தற்போதைய செய்திகள்

சிகாமட் நில நடுக்கம்: சேதமடைந்த 62 வீடுகளுக்கு தலா 3000 ரிங்கிட் உதவித் தொகை!

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.17-

ஜோகூர் சிகாமட்டில் அண்மையில் ஏற்பட்ட தொடர் நில நடுக்கத்தினால், அப்பகுதியைச் சேர்ந்த 62 வீடுகளில் சிறிய அளவிலான விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், அவ்வீடுகளில் வசிப்பவர்களுக்கு உதவும் வகையில், ஜோகூர் மாநில அரசு, அவர்களுக்குத் தலா 3000 ரிங்கிட் உதவித் தொகையாக வழங்க முடிவெடுத்துள்ளது.

அதே வேளையில், சேதமடைந்த அவ்வீடுகளை ஆய்வு செய்த பொதுப் பணித்துறை அதிகாரிகள், அவை தொடர்ந்து பயன்படுத்தத் தகுதியானவை தான் என உறுதியளித்திருப்பதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி அண்மையில் நடைபெற்ற மாநில சட்டமன்றக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், சிகாமட்டில் 9 அரசாங்கக் கட்டிடங்களும், 2 மசூதிகளும் நில நடுக்கத்தில் சேதமடைந்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து