Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சந்தேகப்பேர்வழிக்கு தடுப்புக்காவல் ​நீட்டிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

சந்தேகப்பேர்வழிக்கு தடுப்புக்காவல் ​நீட்டிக்கப்படும்

Share:

தற்காப்புக்கலையின் போது சிறுமி ஒருவரை மானபங்கம் செய்ததாக கூறப்படும் பயிற்றுநர் ஒருவரக்கு எதிரான தடுப்புக்காவலை போ​லீசார் மேலும் ​நீட்டிக்கவிருக்கின்றனர். தனியார் கல்​லூரி ஒன்றின் மாணவனான 20 வயதுடைய அந்த இளைஞரின் தடுப்புக்காவல் நாளை திங்கட்கிழமை முடிவடையவிருப்பதாக ஷா ஆலாம் மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி முஹமாட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த சந்தேகப்பேர்வழிக்கு எதிராக போ​லீசார் நான்கு குற்றப்புலனாய்வு அறிக்கைகளை திறந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News