பினாங்கு மாநிலம்நிபோங் திபால் பகுதியில் சமீபத்தில் தீ விபத்தில் சிக்கிய பட்டாசு கடையின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாமான் பெக்காகா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்திற்குப் பின்னர் உடனடியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக செபராங் பிறை நகர் மன்ற மேயர் டத்தோ பாடருல் அமின் அப்துல் ஹமீத் தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள பிற பட்டாசு கடைகளிலும் பாதுகாப்பு நிலைமைகளை உறுதி செய்ய ஆய்வுகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பு இது போன்ற சோதனைகள் நடத்தப்பட்டிருந்தாலும் கூட, தற்போது கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாடருல் அமின் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காத வகையில், கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.








