Mar 23, 2026
Thisaigal NewsYouTube
காஸாவிற்குக் கூடுதலாக 100 மில்லியன் நிதியுதவி – பிரதமர் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

காஸாவிற்குக் கூடுதலாக 100 மில்லியன் நிதியுதவி – பிரதமர் அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.25-

காஸா மக்களுக்கான மனிதாபிமான உதவித் தொகையாகக் கூடுதலாக 100 மில்லியன் ரிங்கிட் வழங்குவதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று இரவு அறிவித்தார்.

மோசமடைந்து வரும் நெருக்கடி சூழ்நிலையில் பாலஸ்தீனியர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குவதில் மலேசியாவின் நிலைப்பாட்டை அவர் மறுபடியும் உறுதிச் செய்தார்.

நேற்று இரவு, கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெற்ற “மாலாம் ஹிம்புனான் டான் செலாவாட் மலேசியாகூ பெர்சமா காஸா’ என்ற பேரணியில் உரையாற்றிய நிதியமைச்சருமான அன்வார், கடந்த 2023-ஆம் ஆண்டு பாலஸ்தீனுக்கு மலேசியா 100 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்குவதாக அறிவித்தது.

அதன் தொடர்ச்சியாக இப்போது மேலும் கூடுதலாக 100 மில்லியன் ரிங்கிட் மலேசியா வழங்குகிறது என அன்வார் அந்தப் பேரணியில் அறிவித்தார்.

மேலும், “இந்த நாடு அமைதியாகவும், சுதந்திரமாகவும் இருக்கிறது. இதை நீங்கள் உணர்ந்து அமைதியையும், சுதந்திரத்தையும் தற்காத்துக் கொள்ளுங்கள்” என மலேசியர்களுக்கு அன்வார் வேண்டுகோள் விடுத்தார்.

Related News

விடுதியில் சக நாட்டுக்காரர் குத்திக்கொலை: நேபாள இளைஞர்  கைது

விடுதியில் சக நாட்டுக்காரர் குத்திக்கொலை: நேபாள இளைஞர் கைது

இடுகாட்டில் ஒழுக்கக்கேடான செயல்: ஜோடி சிக்கியது

இடுகாட்டில் ஒழுக்கக்கேடான செயல்: ஜோடி சிக்கியது

மத்திய கிழக்கு பதற்றத்தால் மாற்றம்: ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மலேசியா

மத்திய கிழக்கு பதற்றத்தால் மாற்றம்: ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மலேசியா

பட்டாசு விபத்து:  பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

பட்டாசு விபத்து: பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு  - சுகாதார அமைச்சு தகவல்

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்