Mar 22, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் உயர் அதிகாரி உட்பட மூவர் கைது
தற்போதைய செய்திகள்

போலீஸ் உயர் அதிகாரி உட்பட மூவர் கைது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.02-

கைகலப்பு தொடர்பான விசாரணையைத் தொடராமல் இருப்பதற்குக் கைமாறாக 8 ஆயிரம் ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்றதாக நம்பப்படும் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட மூவரைக் கோலாலம்பூர் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.

புத்ராஜெயா நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் அய்னா அஸாரா அரிஃபின் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த உயர் போலீஸ் அதிகாரியை ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் நாளை செப்டம்பர் 3 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணையை எஸ்பிஆர்எம் பெற்றுள்ளது.

மற்ற இரு நபர்கள், மாஜிஸ்திரேட் சான் ஜியா கேய் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, செப்டம்பர் 5 ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்படுவதற்கு எஸ்பிஆர்எம் அனுமதி பெற்றுள்ளது.

அந்த இரு நபர்களில் ஒருவர் பெண் ஆவார். 30 வயது மதிக்கத்தக்க அந்த இரு நபர்களும், போலீஸ் உயர் அதிகாரிக்கு லஞ்சம் வாங்கிக் கொடுப்பதில் இடைத் தரகர்களாகச் செயல்பட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு