Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

தைப்பூச வேல் வேல் முழக்கத்தை கேலி செய்து நடனமாடிய மூவர் உட்பட அறுவரிடம் புகிட் அமான் விசாரணை

Share:

கோலாலம்பூர், மார்ச்.05-

தைப்பூச உற்சவத்தின் வேல் வேல் முழக்கத்தை கேலி செய்து நடனமாடிய எரா எஃப்எம் மலாய் வானொலியின் மூன்று அறிவிப்பாளர்கள் உட்பட அறுவர் இன்று புகிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் விசாரணைக்கு ஆளாகினர்.

நபில் அஹ்மாட், அஸாட் ஜாஸ்மின் ஜோன் லுயிஸ் ஜெப்ரி, மற்றும் ரடின் அமீர் அஃபெண்டி ஆகிய அந்த மூன்று அறிவிப்பாளர்கள் இன்று காலை 10.30 மணியளவில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் கருப்பு நிற Toyota Vellfire வாகனத்தில் வந்திறங்கினர்.

ஆஸ்ட்ட் ஆடியோ நிறுவனத்திற்குச் சொந்தமான ஏரா எஃப்எம் வானொலியின் இதர மூன்று பணியாளர்கள் தனித் தனி வாகனத்தில் வந்தனர். அவர்கள் சம்பவம் நிகழும் போது அந்த காட்சியைப் பார்த்து பரிகாசம் செய்தவர்கள் என்று நம்பப்படுகிறது.

அந்த சர்ச்சைக்குரிய காணொளி ,சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து இந்து சமயத்தை இழிவுப்படுத்தும் நடவடிக்கையில் மொத்தம் ஆறு பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அந்த அறுவரிடமும் புகிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் உயர் மட்ட விசாரணைப் பிரிவான USJT விசாரணை செய்து வருகிறது என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹூசேன் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய அந்த காணொளி தொடர்பில் நாடு தழுவிய நிலையில் 44 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

இவ்விவகாரம் குற்றவியல் சட்டம் 298 ஆவது பிரிவு மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடக சட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் விளக்கினார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து