Mar 10, 2026
Thisaigal NewsYouTube
கொலை வழக்கில் எண்மர் கைது
தற்போதைய செய்திகள்

கொலை வழக்கில் எண்மர் கைது

Share:

கோலாலம்பூர், செந்தூலில் மூன்று இலங்கைப் பிரஜைகள் கொலை செய்யப்பட்டது தொடர்பில் போலீசார் இதுவரையில் எட்டு அந்நிய நாட்டவர்களை கைது செய்துள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அல்லவுடின் அப்துல் மஜிட் தெரிவித்தார்.

இந்த கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பப்படும் பந்திங்கில் பிடிபட்ட இரண்டு ஆடவர்கள் மற்றும் ஒரு தம்பதியர் உட்பட 20 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய எட்டு பேர் இதுவரையில் பிடிபட்டுள்ளனர் என்று டத்தோ அல்லவுடின் குறிப்பிட்டார்.

இந்த நால்வரைத் தவிர மூன்று இலங்கைப் பிரஜைகள் ஒரு பாகிஸ்தான் ஆடவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆகக்கடைசியாக இந்த நான்கு நபர்களும் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு தரை வீட்டில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரையும் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி வரை தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தவிர இந்த மூன்று கொலைகள் நடந்த அன்றைய தினம் சம்பந்தப்பட்ட வீட்டில் கைது செய்யப்பட்ட கணவன், மனைவி இருவரில் கணவன் கடந்த சனிக்கிழமை ஜிஞ்சாங் போலீஸ் நிலைய தடுப்புக்காவலில் இறந்ததாக டத்தோ அல்லவுடின் குறிப்பிட்டார். 43 வயதுடய அந்த நபரின் இறப்பைத் தொடர்ந்து தற்போது ஏழு பேர் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி கோலாலம்புர் செந்தூல்,ஜாலான் பெர்ஹெந்தியான், கம்போங் கோவில் ஹிலேரில் நான்கு மாடி கடை கடை வீட்டில் மூன்று இலங்கைப் பிரஜைகள் கொலை செய்யப்பட்டனர். கொலைக்கான காரணம் தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக டத்தோ அல்லவுடின் தெரிவித்தார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து