Mar 11, 2026
Thisaigal NewsYouTube
ஓன்லைன் மோசடிகளின் கூடாரங்களாக மாறும் ஆடம்பர அடுக்குமாடி வீடுகள்
தற்போதைய செய்திகள்

ஓன்லைன் மோசடிகளின் கூடாரங்களாக மாறும் ஆடம்பர அடுக்குமாடி வீடுகள்

Share:

கோலாலம்பூர் மாநகரில் அதிகமான ஆடம்பர கொண்டோமினியம் வீடுகள், ஓன்லைன் மோசடிகளுக்கு வித்திடும் கைப்பேசி அழைப்புக்கான ஸ்கேம் மையங்களாக மாறி வருகின்றன என்று மாநகர் போ​லீ​ஸ் தலைவர் டத்தோ அல்லாவுதீன் அப்துல் மஜித் அம்பலப்படுத்தியுள்ளார்.

கடந்த இரண்டு மாத காலமாக கோலாலம்பூர் மாநகரில் போ​லீசார் மேற்கொண்ட தொடர் சோதனை நடவடிக்கைகளில் இது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வாடிக்கையாளர்களை தேடுவதற்கு ஆடம்பர அடுக்குமாடி ​வீடுகள் தற்போது மோசடிக்காரர்களின் கூடாரமாக மாறி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக பெரும்பாலான மோசடிக் கும்பல்கள், யாரும் சந்தேகப்படாத அளவிற்கு அதிக கட்டணத்தில் இந்த ஆடம்பர அடுக்குமாடி வீடுகளை வாடகைக்கு எடுத்து, இத்தகைய ஓன்லைன் மோசடிகளை நடத்தி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று டத்தோ அல்லாவுதீன் குறிப்பிட்டார்.

ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்பு பகுதிகளின் குடியிருப்பாளர்கள், அதிகாரிகள் ஆகியோரின் கண்க​ளை மறைக்கும் அள​விற்கு பலத்த பாதுகாப்பு உள்ள வீடமைப்புப்பகுதிகளை தேர்​வு செய்து இத்தகைய மோசடி வேலைகளை அவை கனகச்​சிதமாக நடத்தி வந்துள்ளன. இத்தகைய மோசடிக் கும்பல்களின் நடவடிக்கைகளை அடுக்குமாடி வீடுகளின் ஜே.எம்.பி நிர்வாகங்கள் அணுக்கமாக கண்காணிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

ஆடம்பர அடுக்குமாடி வீடுகளில் மட்டும் கடந்த இரண்டு மாத காலக்கட்டத்தில் 343 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்களில் பத்து பேர் ​நீதிமன்றத்தில் குற்றஞ்சுாட்டப்பட்டு விட்டனர்.கோலாலம்பூர் மாநகரில் இந்த கைது நடவடிக்கைகள் எந்ததெந்த ஆடம்பர அடுக்குமாடி வீடுகளில் நடைபெற்றன என்பதை போ​லீஸ் அம்பலப்படுத்துமானால் அனைவருமே அதிர்ச்சிக்குள்ளாகும் நிலை ஏற்படலாம் என்று டத்தோ அல்லாவுதீன் அதிர்ச்சி தகவலை ​வெளியிட்டுள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு