Jul 1, 2026
Thisaigal NewsYouTube
மானபங்கம்: அந்நிய ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

மானபங்கம்: அந்நிய ஆடவர் கைது

Share:

சுபாங் ஜெயா, அக்டோபர்.23-

தனது உறவுக்காரரின் இரண்டு சிறார்களை மானபங்கம் படுத்தியதாகக் கூறப்படும் அந்நிய நாட்டு ஆடவர் ஒருவரைப் போலீசார் கைது செய்தனர். நேற்று புதன்கிழமை அளிக்கப்பட்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அன்றைய தினமே அந்த நபர் கைது செய்யப்பட்டதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

அச்சம்பவம் கடந்த 2023 ஆம் ஆண்டு சுபாங் ஜெயா, USJ 9 இல் நிகழ்ந்ததாக போலீஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டது. அவ்விரு சிறார்களையும் தனது அறைக்கு அழைத்து வந்து, அந்த நபர் ஆபாசச் சேட்டை புரிந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த இரண்டு சிறார்களும், அந்த நபருக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் மேலும் விவரித்தார்.

Related News

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

4 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை

2018 முதல் தொடரும் களப்பணி; ஸ்கூடாய் மக்களின் பேராதரவோடு களம் காணும் ஜசெக வேட்பாளர் கார்த்தியாயினி

2018 முதல் தொடரும் களப்பணி; ஸ்கூடாய் மக்களின் பேராதரவோடு களம் காணும் ஜசெக வேட்பாளர் கார்த்தியாயினி