Dec 2, 2025
Thisaigal NewsYouTube
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக 20,000 ஆயிரம் வெள்ளி அபராதம்.
தற்போதைய செய்திகள்

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக 20,000 ஆயிரம் வெள்ளி அபராதம்.

Share:

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக ஒரு தனித்து வாழும் தாயாரான லோ சியூ ஹோங்கின் முன்னாள் கணவர் முகமட் நாகேஸ்வரன் முனியாண்டிக்குக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று 20,000 வெள்ளி அபராதம் விதித்தது.

நீதிமன்ற நிர்வாக நடைமுறைகளில் நாகேஸ்வரன் தலையிட்ட குற்றத்திற்காக நீதிமன்ற அவமதிப்பு அடிப்படையில் அவருக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எவ்ரோல் மரியட் பீட்டர்ஸ் அபராதத்தை விதித்தார்.

மதம் மாறியவரான நாகேஸ்வரன் முனியாண்டி, தீர்ப்பு அளிக்கப்பட்ட தினத்திலிருந்து 14 நாட்களுக்குள் அபராதத் தொகைக்ச் செலுத்த வேண்டும். இல்லையேல் 14 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி எவ்ரோல் மரியட் பீட்டர்ஸ் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

தமது மூன்று பிள்ளைகளைக் கடத்திச் சென்றதுடன், தம்முடைய அனுமதியின்றி ஒரு தலைபட்சமாக மதம் மாற்றம் செய்ததாக குற்றச்சாட்டுப்பட்டுள்ள நாகேஸ்வரன் முனியாண்டிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மீதான பூர்வாங்க வழக்கு தொடங்கப்பட வேண்டும் என்று லோ சியூ ஹோங் தொடுத்திருந்த வழக்கு மனுவிற்குக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி நீதிமன்றம் அனுமதி அளித்து இருந்தது.

நீதிமன்றத்திற்குத் தேவைப்படக்கூடிய ஆவணங்களின் நகலை ஒப்படைப்பதிலிருந்து தவிர்க்கப்பார்க்கும் நாகேஸ்வரன் முனியாண்டியின் செயல், நீதிமன்ற அவமதிப்புக்குரியதாகும் என்று நீதிபதி எவ்ரோல் மரியட் பீட்டர்ஸ் தமது தீர்ப்பில் தெரிவித்து இருந்தார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்