கோலா லங்காட் , ஜூலை 02-
தாம் செலுத்திய Toyota Avanza வாகனம், லோரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து உருகுலைந்த வாகனத்திற்குள் சிக்கிக்கொண்ட 40 வயது நபர், சுமார் 8 நிமிடங்கள் பெரும் பரிதவிப்புக்கு ஆளானார்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 2.50 மணியளவில் ஜாலான் பந்திங், தெலோக் பங்லிமா கராங்- கில் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தெலோக் பங்லிமா கராங் - தீயணைப்பு, மீட்பு நிலையத்தைச் சேர்ந்த அறுவர் கொண்ட வீரர்கள், பிரத்தியேக சாதனங்களைப் பயன்படுத்தி, இடிபாட்டிலிருந்து அந்த ஆடவரை மீட்டனர்.
அந்த ஆடவர் மீட்கப்படும் வரை பெரும் அவதிக்குள்ளானதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் அந்த ஓட்டுநரின் இருகார்களும் நசுங்கிய இரும்புப் பிளேட்டின் மத்தியில் சிக்கிக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.








