அரசாங்க மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த மருத்துவர்களின் வேலை நிறுத்த நடவடிக்கை நாளை திங்கட்கிழமை திட்டமிட்டப்படி நடைபெறும் என்று இன்றிரவு அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்த நடவடிக்கையை கைவிடும்படி சுகாதார அமைச்சு அறிவுறுத்திய போதிலும், தங்களின் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்படாமல் கிடப்பில் வைத்திருக்கும் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு செவிசாக்கப்போவதில்லை என்று ஒப்பந்த மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
அரசுப்பணியில் நிரந்தரப் பணியாளர்களாக தங்களை மாற்றாமல், தொடர்ந்து குத்தகை அடிப்படையில் வைத்திருக்கும் சுகாதார அமைச்சின் முடிவை எதிர்த்து நாடு தழுவிய நிலையில் சுமார் எட்டாயிரம் ஒப்பந்த மருத்துவர்கள் வேலை நிறுத்த நடவடிக்கையில் ஈடுபடவிருக்கின்றனர்.
திங்கட்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள அவர்கள் உறுதி பூண்டுள்ளனர். திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் மறியல் நடவடிக்கைக்குக் கருப்புத்தினம் என்று அவர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.

தற்போதைய செய்திகள்
ஒப்பந்த மருத்துவர்களின் வேலை நிறுத்த நடவடிக்கை திட்டமிட்டப்படி நாளை நடைபெறும்
Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


