May 21, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் அருணகிரி நாதர் விழா
தற்போதைய செய்திகள்

பினாங்கில் அருணகிரி நாதர் விழா

Share:

பினாங்கு, செபராங் ஜெயா, அருள்மிகு கருமாரியம்மன் ஆலயத்தில் நாளை டிசம்பர் 30 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.45 மணி முதல் இரவு 9.30 மணி வரை அருணகிரிநாதர் விழா வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

மலேசிய இந்து சங்கம், செபராங் ஜெயா வட்டாரப் பேரவை ஏற்பாட்டில் செபராங் ஜெயா அருள்மிகு கருமாரியம்மன் ஆலயம் மற்றும் மலேசிய முருக பக்திப் பேரவை ஆதரவுடன் பேரவைத் தலைவர் பெருமதிப்பிற்குரிய சமயக் காவலர் “விவேகரத்னா” வர்மன் தலைமையில் அருணகிரி நாதர் விழா நடைபெறவிருக்கிறது.

ஆன்மீக சிந்தனை மேலோங்க நடைபெறும் இந்த மாபெரும் அருணகிரிநாதர் விழாவில் பினாங்கு வாழ் இந்து பெருமக்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு சிவஸ்ரீ தினேஷ் வர்மன் குருக்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News