தனது மாநில கல்விக் கொள்கையில் சரவா , தன்னாட்சி முறையை கொண்டிருக்க வேண்டும் என்ற மாநிலத்தின் எதிர்பார்ப்பானது, அது தொடர்பாக ஒரு குழுவினர் நடத்தி வரும் ஆய்வைப் பொறுத்தே முடிவு செய்யப்படும் என்று துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடிலா யூச்சோஃப் தெரிவித்தார்.
இந்த ஆய்வானது, மலேசியாவில் இணைவதற்கு சரவா மாநிலம் செய்து கொண்ட 1963 ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தத்தின்படி மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆய்வின் மூலம் சரவா மாநில கல்விக்கொள்கையில் என்னென்ன விவகாரங்களுக்கான அதிகாரத்தை மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது தீர்க்கமாக முடிவு செய்யப்படும் என்று துணைப்பிரதமர் விளக்கினார்.








