இந்தோனேசிய பெண்ணைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு வெளிநாட்டு தொழிலாளர்கள், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று தங்களது குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.
பாகிஸ்தான் நாட்டவர்களான அலி அர்ஷத் மற்றும் ஹபீப் உர் ரஹ்மான் ஆகிய இருவரும், கடந்த ஏப்ரல் 14 மற்றும் 15-ஆம் தேதிகளுக்கு இடையில் ஜாலான் இம்பி சாலையில் உள்ள ஒரு தங்கும்விடுதியில் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 10 முதல் 30 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இவ்வழக்கு மேலாண்மையானது வரும் ஜூன் 4-ஆம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.








