சர்ச்சைக்குரிய 1எம்.டி.பி. நிதி முறைகேட்டில் போலீசாரால் தேடப்பட்டு வரும் மலேசிய தொழில் அதிபரான ஜோ லோ, கடந்த 2012 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வதற்குப் பிரபல ரேப் பாடகர் பிரேஸ் மைக்கலுக்கு 2 கோடி அமெரிக்க டாலர் அல்லது எட்டரை கோடி வெள்ளியை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணம் மாற்றம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு ஆளாகியுள்ள அந்த ரேப் பாடகர், அந்த 2 கோடி அமெரிக்க டாலரை பெற்றப்பின்னர், ஜோ லோவை தமது சிறப்பு உதவியாளரைப் போல் ஆள் மாற்றாட்டம் செய்து, வாஷிங்டனில் நடந்த நிதி திரட்டும் விருந்து நிகழ்வில் ஒபாமாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாக பாடகர் பிரேஸ் மைக்கல் நீதிமன்றத்தில் தெரிவித்தார் என்று புலூம்பர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


