சர்ச்சைக்குரிய 1எம்.டி.பி. நிதி முறைகேட்டில் போலீசாரால் தேடப்பட்டு வரும் மலேசிய தொழில் அதிபரான ஜோ லோ, கடந்த 2012 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வதற்குப் பிரபல ரேப் பாடகர் பிரேஸ் மைக்கலுக்கு 2 கோடி அமெரிக்க டாலர் அல்லது எட்டரை கோடி வெள்ளியை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணம் மாற்றம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு ஆளாகியுள்ள அந்த ரேப் பாடகர், அந்த 2 கோடி அமெரிக்க டாலரை பெற்றப்பின்னர், ஜோ லோவை தமது சிறப்பு உதவியாளரைப் போல் ஆள் மாற்றாட்டம் செய்து, வாஷிங்டனில் நடந்த நிதி திரட்டும் விருந்து நிகழ்வில் ஒபாமாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாக பாடகர் பிரேஸ் மைக்கல் நீதிமன்றத்தில் தெரிவித்தார் என்று புலூம்பர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

Related News

சமய விவகாரங்களை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் - பாஸ் வலியுறுத்து

வங்கதேச வெளியுறவு அமைச்சருடன் மலேசிய தூதர் சந்திப்பு/ மலேசிய வாகன உற்பத்தி பாகங்கள் வங்கதேசத்தில் ஒன்றிணைக்கும் வாய்ப்புகள் ஆய்வு

சிலாங்கூரில் 105 கிலோ போதைப் பொருள் பறிமுதல் - இருவர் கைது

ஈப்போவில் நோன்பைத் தவிர்த்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 முஸ்லிம்கள் கைது

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு


