சர்ச்சைக்குரிய 1எம்.டி.பி. நிதி முறைகேட்டில் போலீசாரால் தேடப்பட்டு வரும் மலேசிய தொழில் அதிபரான ஜோ லோ, கடந்த 2012 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வதற்குப் பிரபல ரேப் பாடகர் பிரேஸ் மைக்கலுக்கு 2 கோடி அமெரிக்க டாலர் அல்லது எட்டரை கோடி வெள்ளியை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணம் மாற்றம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு ஆளாகியுள்ள அந்த ரேப் பாடகர், அந்த 2 கோடி அமெரிக்க டாலரை பெற்றப்பின்னர், ஜோ லோவை தமது சிறப்பு உதவியாளரைப் போல் ஆள் மாற்றாட்டம் செய்து, வாஷிங்டனில் நடந்த நிதி திரட்டும் விருந்து நிகழ்வில் ஒபாமாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாக பாடகர் பிரேஸ் மைக்கல் நீதிமன்றத்தில் தெரிவித்தார் என்று புலூம்பர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


