சர்ச்சைக்குரிய 1எம்.டி.பி. நிதி முறைகேட்டில் போலீசாரால் தேடப்பட்டு வரும் மலேசிய தொழில் அதிபரான ஜோ லோ, கடந்த 2012 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வதற்குப் பிரபல ரேப் பாடகர் பிரேஸ் மைக்கலுக்கு 2 கோடி அமெரிக்க டாலர் அல்லது எட்டரை கோடி வெள்ளியை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணம் மாற்றம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு ஆளாகியுள்ள அந்த ரேப் பாடகர், அந்த 2 கோடி அமெரிக்க டாலரை பெற்றப்பின்னர், ஜோ லோவை தமது சிறப்பு உதவியாளரைப் போல் ஆள் மாற்றாட்டம் செய்து, வாஷிங்டனில் நடந்த நிதி திரட்டும் விருந்து நிகழ்வில் ஒபாமாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாக பாடகர் பிரேஸ் மைக்கல் நீதிமன்றத்தில் தெரிவித்தார் என்று புலூம்பர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


