May 22, 2026
Thisaigal NewsYouTube
துப்பாக்கிக்காரரை போலீசார் தேடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

துப்பாக்கிக்காரரை போலீசார் தேடி வருகின்றனர்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 8-

மூவர் காயம் அடையும் அளவிற்கு தூப்பாக்கி சூட்டை நடத்திய ஆசாமியை சரவாக் போலீசார் தேடி வருகின்றனர்.

சரவாக், ஜாலான் கூச்சிங் - செரியன், 19 ஆவது மைலில் உள்ள ஒரு பசார் ராயாவிற்கு பின்புறம் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய நபர் தேடப்பட்டு வருவதாக படவான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமது இர்வான் ஹபீஸ் முஹமட் ரட்ஸி தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை 1.57 மணியளவில் போலீசார் அவசர அழைப்பை பெற்றதாக குறிப்பிட்ட அவர், வேட்டைத் துப்பாக்கியை வைத்திருந்த அந்த ஆசாமி, தனது மூன்று நண்பர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.

காயமுற்ற 24 க்கும் 25 க்கும் இடைப்பட்ட வயதுடைய 3 ஆடவர்கள், தற்போது சரவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று முகமது இர்வான் குறிப்பிட்டார்.

Related News