May 20, 2026
Thisaigal NewsYouTube
சிறுமியிடம் பாலியல் பலாத்காரம், 7 பேர் கைது
தற்போதைய செய்திகள்

சிறுமியிடம் பாலியல் பலாத்காரம், 7 பேர் கைது

Share:

பதினொரு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக நம்பப்படும் ஆறு சகோதரர்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பேரா, கெரிக் - க்கில் உள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பாக கடந்த நவம்பர் 20 ஆம் தேதி அந்த சிறுமியின் 36 வயது தாயார் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த சகோதரர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக கிரிக் மாவட்ட போலீஸ் தலைவர் சுல்கிஃப்லி மஹ்மூட் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட கும்பல் கூட்டாக இந்த ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்ட காட்சியை பாதிக்கப்பட்ட சிறுமியின் ஒன்பது வயது சகோதரன் நேரில் பார்த்துள்ளார். இது குறித்து தனது தாாயரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து இவ்விவகாரம் அம்பலத்திற்கு வந்ததாக சுல்கிஃப்லி மஹ்மூட் குறிப்பிட்டார்.

Related News