தமது மைத்துனருடன் அடிதடி சண்டையில் ஈடுபட்டதாக நம்பப்படும் அந்நிய நாட்டுப் பிரஜை ஒருவர் கடுங்காயங்களுக்கு ஆளாகினார். இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர், கம்போங் ஆயிர் பனாஸ் அடுக்குமாடி வீட்டில் நிகழ்ந்தது என்று வங்சா மாஜு மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் டி.சரலதன் தெரிவித்தார்.
மாலை 5.34 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் அந்த அந்நிய நாட்டவர், அடுக்குமாடி வீட்டின் லிப்டு அருகில் சுயநினைவின்றி ரத்த வெள்ளத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்து இருப்பதாக டி.சரலதன் மேலும் விவரித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


