Mar 13, 2026
Thisaigal NewsYouTube
தீர்ப்புகளைக் காலதாமதமாக எழுதுவதா? நீதிபதிகளைக் கண்டித்தார் தலைமை நீதிபதி
தற்போதைய செய்திகள்

தீர்ப்புகளைக் காலதாமதமாக எழுதுவதா? நீதிபதிகளைக் கண்டித்தார் தலைமை நீதிபதி

Share:

கோலாலம்பூர், ஜனவரி.12-

தீர்ப்புகளைக் காலதாமதமாக வழங்குவது குறித்து நீதிபதிகளுக்கு நாட்டின் தலைமை நீதிபதி டத்தோ ஶ்ரீ வான் அஹ்மாட் ஃபாரிட் வான் சாலே இன்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தீர்ப்புகளுக்கான எழுத்துப்பூர்வ காரணங்களைக் குறித்த நேரத்தில் வழங்க முடியாத நீதிபதிகள், பதவியிலிருந்து விலகுவதே கண்ணியமான வழியாகும் என்று அவர் கூறினார். "வெப்பத்தைத் தாங்க முடியாவிட்டால், சமையலறையை விட்டு வெளியேறுவதே சிறந்த விருப்பம்" என்ற பழமொழியை மேற்கோள் காட்டி அவர் பேசினார்.

தீர்ப்பு வழங்கப்பட்ட எட்டு வாரங்களுக்குள் அதன் எழுத்துப்பூர்வ காரணங்களைத் தயாரிப்பது நீதிபதிகளின் கடமை என்று அவர் சுட்டிக் காட்டினார்.

பத்து அல்லது அதற்கு மேற்பட்ட நிலுவையில் உள்ள தீர்ப்புகளை வைத்திருக்கும் நீதிபதிகள், நீதித்துறைக்கும் பொதுமக்களுக்கும் பெரும் சுமையாக இருப்பதாக டத்தோ ஶ்ரீ வான் அஹ்மாட் சாடினார்.

தீர்ப்புகள் எழுதப்படாமல் இருப்பதால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பணிகள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட தரப்பினர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற '2026-ஆம் ஆண்டு சட்ட ஆண்டு தொடக்க விழாவில், டத்தோ ஶ்ரீ வான் அஹ்மாட் இந்த நினைவுறுத்தலை நீதிபதிகளுக்கு வழங்கினார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்