கோலாலம்பூர், பிப்ரவரி.24-
கோலாலம்பூர், ஜாலான் செந்தூலில் உள்ள வாடகை வீடு ஒன்றில், உடன் தங்கியிருந்த பெண் ஒருவரைப் பாலியல் சீண்டல் செய்த ஆடவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி, அதிகாலை நடந்த இச்சம்பவத்தின் போது, உறக்கத்தில் இருந்த 27 வயதான அப்பெண்ணை, அந்த ஆடவர் தகாத இடங்களில் தொட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த அந்த ஆடவரைப் போலீசார் தேடி வருவதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் பஸ்ரி சகோனி தெரிவித்துள்ளார்.
குற்றவியல் சட்டம் பிரிவு 354-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இவ்வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனையும், பிரம்படியும் வழங்கப்படலாம்.








