May 12, 2026
Thisaigal NewsYouTube
விஜயின் எழுச்சி மக்கள் போராட்டத்தின் மகத்தான வெற்றி - அமைச்சர் ரமணன் கருத்து
தற்போதைய செய்திகள்

விஜயின் எழுச்சி மக்கள் போராட்டத்தின் மகத்தான வெற்றி - அமைச்சர் ரமணன் கருத்து

Share:

தமிழ்நாட்டின் முதலமைச்சராக தென்னிந்திய திரைப்பட நட்சத்திரமான விஜய் பதவியேற்றிருப்பது, மக்களின் நீண்டகால போராட்டத்தையும், கொள்கைகளில் உறுதியாக நின்று துணிச்சலுடன் செயல்பட்டால், மக்கள் ஆதரவை வெல்ல முடியும் என்பதையும் நிரூபிப்பதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விஜயின் அரசியல் பயணமானது, பல ஆண்டுகள் அரசியல் சவால்கள் மற்றும் அழுத்தங்களை எதிர்கொண்டு, பின்னர் மலேசியாவின் 10-வது பிரதமராக உயர்ந்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் நீண்ட கால அரசியல் போராட்டத்தை நினைவூட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருவரும், மக்களின் நலனைக் காக்க நேர்மையும், தியாகமும், துணிச்சலும் அவசியம் என்பதை நிரூபித்துள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ரமணன் தெரிவித்துள்ளார்.

மேலும், பொழுதுபோக்கு துறையில் இருந்து, தமிழ்நாட்டின் உயரிய தலைமைப் பொறுப்பான முதலமைச்சர் பதவிக்கு விஜய் உயர்ந்திருப்பது, அடித்தட்டு மக்களுடன் நெருக்கமாக இருந்து அவர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொள்ளும் தலைவரின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்றும் ரமணன் தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றியானது, தமிழ்நாட்டில் வளர்ச்சி, ஒற்றுமை மற்றும் மக்கள் நலனை மேலும் வலுப்படுத்தும் புதிய அத்தியாயமாக அமையும் என்றும் ரமணன் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், பொருளாதாரம், கல்வி, மனிதவள மேம்பாடு மற்றும் கலாசாரம் போன்ற துறைகளில் மலேசியா மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையிலான உறவும் ஒத்துழைப்பும் மென்மேலும் வலுப்பெறும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் ரமணன் தெரிவித்துள்ளார்.

Related News

ஹாண்டா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை - டபிள்யூ.எச்.ஓ அறிவிப்பு

ஹாண்டா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை - டபிள்யூ.எச்.ஓ அறிவிப்பு

ஆயுதப்படைகளுக்கான இராணுவ கொள்முதல் நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் - தற்காப்பு அமைச்சு உறுதி

ஆயுதப்படைகளுக்கான இராணுவ கொள்முதல் நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் - தற்காப்பு அமைச்சு உறுதி

 இந்தியப் பெண்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மூலம் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும்: டத்தோ அ.சிவநேசன் அழைப்பு

இந்தியப் பெண்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மூலம் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும்: டத்தோ அ.சிவநேசன் அழைப்பு

தேடப்பட்டு வந்த 19 வயது மாணவரின் உடல் படாஸ் ஆற்றில் மிதந்தது

தேடப்பட்டு வந்த 19 வயது மாணவரின் உடல் படாஸ் ஆற்றில் மிதந்தது

கருகலைப்பில் பெண் உயிரிழந்த வழக்கு: முன்னாள் கிளினிக் ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது

கருகலைப்பில் பெண் உயிரிழந்த வழக்கு: முன்னாள் கிளினிக் ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது

பினாங்கில் தமிழ் இடைநிலைப்பள்ளிக்காக 4 ஏக்கர் நிலம் தயார் - மத்திய அரசிடம் விண்ணப்பிக்காதது ஏன்? - குமரன் கிருஷ்ணன் கேள்வி

பினாங்கில் தமிழ் இடைநிலைப்பள்ளிக்காக 4 ஏக்கர் நிலம் தயார் - மத்திய அரசிடம் விண்ணப்பிக்காதது ஏன்? - குமரன் கிருஷ்ணன் கேள்வி